சித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது

chitra

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஹோட்டலில் அவருடன் தங்கியிருந்த அவரின் கணவர் ஹேமந்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவர்தான் என தெரியவந்தது. எனவே, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

chitra

தனது மகள் சித்ராவை ஹேமந்த்தான் கொலை செய்து விட்டான் என சித்ராவின் தாய் செய்தியாளர்களிடம் தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.