Author: Sri Sriram

  • விஜய்க்கு கதை சொன்னா.. தற்கொலை பண்ணிருப்பேன்: இயக்குநர் பகீர் தகவல்!

    vijay-1 சித்திரம் பேசுதடி படத்தை நடிகர் விஜய்க்காக தான் எழுதினேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இயக்குநர் மிஷ்கின் அளித்த பேட்டியில், “சித்திரம் பேசுதடி பிரிவியூ ஷோக்கு வந்த நடிகர் விஜய், அந்த படத்தை பார்த்துவிட்டு, ‘அண்ணா. எனக்கும் இந்த மாதிரி படம் ஒன்று பண்ணுங்க’ என கேட்டார். உடனே நான் இந்த படமே உங்களுக்காகதான் எழுதுனது என அவரிடம் கூறினேன். உடனே என் கழுத்தை பிடிச்சு, ஏன் எங்கிட்ட சொல்லல?…

  • நன்றி.. ஐலவ் யூ அஜித் சார்.. என் இன்ஸ்பிரேஷன் நீங்க.. ஜான் கொக்கன் ட்விட்!

    ajith என்னை எப்பொழுதும் ஊக்குவிப்பதற்கும் தன்னம்பிக்கை கொடுத்ததற்கும் நன்றி அஜித் சார்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார், ‘சார்பட்டா பரம்பரை’ ஜான் கொக்கன். இன்று வெளியாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இடியாப்ப பரம்பரையின் பாக்ஸிங் வீரராக உடல்மொழி நடிப்பிலேயே மிரட்டியிருந்தார் ‘வேம்புலி’ கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன். கவனம் ஈர்த்துள்ள அவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில், தனக்கு ஊக்கம் கொடுத்தது அஜித்தான் என்று நன்றி கூறியிருக்கிறார் ஜான் கொக்கன். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்…

  • பிரியாமணி திருமணம் செல்லாது: முதல் மனைவி புகார்!

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வரும் ப்ரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் முஸ்தபா ராஜின் முதல் மனைவி நான் தான் என்று கூறி ஆயிஷா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ப்ரியாமணி மற்றும் முஸ்தபா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் குறித்து ஆயிஷா கூறியதாவது, முஸ்தபா இன்னும் என் கணவர் தான். அவருக்கும்,…

  • வலிமை பட பாடலில் எஞ்சாமி எஞ்சாமி புகழ் அறிவு!

    வலிமை படத்தில் லோக்கல் குத்து பாடலை பாடகர் அறிவு பாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. இறுதி கட்டத்தில் இருக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் ‘கும்தா’ என்ற பாடல் இருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது இப்படத்தில் லோக்கல் குத்து ஒன்று இருப்பதாகவும், அந்த பாடலை அறிவு பாடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.…

  • எப்பவோ ஆனாலும் இப்பவும் வைரல்தான்! ‘தல’ ஆச்சே!

    தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகர் கொண்டாடப்படுவது இங்கு இயல்பே. ஆனால் ஒருவர் மட்டும் தன்னைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்களை கண்டுகொள்ளாமல் தன் பணியையும், தன் கடமையையும் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது தான் அவருக்கான அடையாளம். சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவரும் இவரை ரசிக்கிறார்கள். அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன் என கொண்டாடுகிறார்கள். எத்தனை கொண்டாடினாலும் அதற்கான தலைகணம் எப்போதும் இவரிடம் இருந்ததில்லை. அவர்தான் தமிழ் சினிமா…

  • அரசியல் செய்ய தமிழ்! பணத்தை அள்ளி குவிக்க அயல் மொழி!

    தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு கதை, வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் கருணாநிதி. அவருடைய பேரன்கள் உதயநிதி, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாகவும் இருக்கிறார்கள். கருணாநிதி முதல்வராக இருந்த போது திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று அறிவித்தார். அதன்பிறகு தமிழ்த் திரையுலகில் அனைவருமே தமிழில் மட்டுமே பெயர் வைத்தார்கள். ஆனால், ஜிஎஸ்டி வந்த பிறகு வரி விலக்கு என்பது இல்லாமல் போய்விட்டது. அதனால், மீண்டும் ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழித் தலைப்புகள் தமிழ் சினிமாவில் அதிகமாகிவிட்டது.…

  • நிர்வாணமாய் நடிக்கச் சொன்னார்: ராஜ் குந்த்ரா மீது நடிகை புகார்

    தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா ஆபாச படங்களை தயாரித்த வழக்கில் மும்பை காவல்துறையினர் நேற்றிரவு அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் ராஜ் குந்த்ரா தன்னை நிர்வாணமாக நடித்த சொன்னதாக நடிகை ஷகாரிகா சோனா புகார் அளித்துள்ளார். வெப்சீரிஸ் வாய்ப்பை தனக்கு வழங்க இயக்குனர் உமேஷ் காமத் ஜூம் காலில்…

  • ஆபாச படம் எடுத்து விற்பனை! ஷில்பாவின் கணவர் கைது!

    ஆபாச பட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். தட்கான், பாஷிகர், ஜான்வார் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் ஷில்பா ஷெட்டி நடித்துள்ளார். இவரது கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசார்…

  • ரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட குணசித்திர நடிகர்!

    தலைவாசல் விஜய் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழக மக்கள் நெஞ்சங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் தலைவாசல் விஜய். இவர் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாகவும், மனதில் பதியக்கூடியதாகவும் இருக்கும். சாமானிய மனிதனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜய். ஒரு பக்கம் குடும்பம், மற்றொரு பக்கத்தில் மனதில் பதியமிட்ட சினிமா ஆசை. இரண்டிலும் சமமாக பயணம் செய்து இன்று உச்சத்தை…

  • பிரபல இசையமைப்பாளர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

    பிரபல இசையமைப்பாளரான டிஎஸ் முரளிதரன் காலமானார். சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன். இவரது இசையில் வெளியான வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடல் பெரும் ஹிட்டானது. டிஎஸ் முரளிதரன் தமிழ் மட்டுமின்றி கோத்தம் என்கிற ஹிந்தி படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிகை மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார். இரண்டே பேர் நடித்த “வித்தையடி நானுனக்கு” என்ற படத்தை இயக்கி டிஎஸ்…