[prisna-google-website-translator]

30 வருட திரையுலக பயணம்… யுவராணி!

பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு: நடிகை யுவராணி

நடிகை யுவராணி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சத்ரபதி படம் இயக்கிய இயக்குனர் ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் 1992ல் நடிகை நளினி சகோதரர் ஜெகன், நடிகை யுவராணி பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா நடிப்பில் அறிமுகப் படுத்தி வெளிவந்த புதுவருஷம் என்ற படத்தில் முதலில் அறிமுகமானார்.

யுவராணி ஆனந்தராஜ், செல்வா நடிப்பில் வெளியான தம்பி ஊருக்குப் புதுசு படம் மூலம் 1991ல் முன்னதாக வெளியானது. கேப்டன் விஜயகாந்த் மற்றும் விஜய் இனணந்து நடித்த செந்தூரப் பாண்டி படம் யுவராணியை பிரபலமாக்கியது.

ஜாதிமல்லி, பசும்பொன், செல்லக் கண்ணு பார்த்தாலே பரவசம், சிலம்பாட்டம், சொல்ல மறந்த கதை, டூயட், திரும்பிப் பார், செந்தூரப் பாண்டி, பாட்ஷா, சிங்கம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மலையாள மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை யுவராணிக்கு இன்று (30.11.2021) இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

Leave a Reply