[prisna-google-website-translator]

கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

கொரோனாவோடு போராடுகின்ற ஹீரோ ராஜசேகர். ஆங்க்ரி யெங் மேன் டாக்டர் ராஜசேகரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால்  தாக்கப்பட்டார்கள். அவருடைய பெண்களான சிவானி, சிவாத்மிகா இருவரும் கொரோனாவில் இருந்து நலம் பெற்று திரும்பி விட்டார்கள். ஆனால் ஹீரோ ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி ஜீவிதா இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை.

ராஜசேகரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அண்மையில் அவருடைய பெண் சிவாத்மிகா ட்விட்டர் செய்துள்ளார். தன் தந்தை விரைவில்  குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ரசிகர்களை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுள்ளார்.

கோரோனாவோடு அப்பாவின் போராட்டம் மிகவும் கவலையாக உள்ளது. ஆனாலும் அவர் மிகவும் தீவிரமாக போராடி வருகிறார். உங்கள் அன்பும் பிரார்த்தனையும் எங்களை காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்பா விரைவில் நலமடைய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கோருகிறேன். உங்கள்  அன்பாலும் அபிமானத்தாலும் அவர் விரைவில் உடல் நலம் பெற்று வெளி வருவார் என்று டுவிட் செய்துள்ளார்.

என் தந்தை கொரோனாவோடு போராடுகின்ற விஷயம் உண்மைதான். ஆனால் அவருடைய ஆரோக்கியம்  நிலையாகவே உள்ளது. மெதுவாக உடல் நலம் தேறி வருகிறார். உங்கள் பிரார்த்தனையும் அன்பும் எங்களுக்கு மிகவும் தேவை. அவருடைய ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டாம். தயவு செய்து ஃபேக் நியூஸ் பரப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று அவர்  மறு ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply