[prisna-google-website-translator]

படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு நேர்ந்த சம்பவம்.. அதனால் அவர் செய்த செயல்!

அறுவை சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு இருந்ததால், காயத்தைப் பொருட்படுத்தாமல் நடித்து வந்தார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான ஷர்வானந்த் தோள்பட்டை காயத்துக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் ஷர்வானந்த். சேரன் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் கதை’ படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ஷர்வானந்த், தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான ’96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார்.

ஜானு என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை, தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கி இருந்தார். தெலுங்கில் த்ரிஷா கேரக்டரில் நடிகை சமந்தா நடித்திருந்தார்.

 
படத்தின் ஷூட்டிங்கின் போது ஷர்வானந்துக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அறுவை சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு இருந்ததால், காயத்தைப் பொருட்படுத்தாமல் நடித்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்றார். அங்கு தோள்பட்டை காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்போது ஓய்வு எடுத்து வரும் அவர் இன்னும் ஒரு வாரம் கழித்து இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply