[prisna-google-website-translator]

நீதிமன்றம் கொடுத்த ஷாக் – அதிர்ச்சி ஆன இரண்டாம் குத்து படக்குழு

கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு  வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது.

எனவே, தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது. மேலும், இப்படத்தில் இடம் பெற்ற ‘பூம் பூம்’ பாடல் வரிகள் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த பாடலில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளது. எனவே, மதுரை உயர் நீதிமன்றத்திதிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், மதுரை நீதிமன்றம் இப்படத்தின் டீசர் வீடியோவை சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply