

நடிகர் அஜித்தின் வலிமை படம் குறித்து ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அஜித் நடிப்பில்,ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார்.
இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இரண்டு வாரத்தில் இப்படம் சுமார் ரூ.200 கோடி வசசூலீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வலிமை படம் குறித்து சாணக்கியா என்ற ஊடக நிறுவனரும் செய்தி சேனல்களில் பிரபலமானவருமான ரங்கராஜ் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில், வலிமை பார்த்தேன். அதிர்ந்தேன்.
சர்வதேச தரம்! தமிழகம் இன்னும் விவாதிக்காத விஷயம்! பெருந்திரையில் பார்த்தே ஆக வேண்டிய படம்.
கதை, இயக்கம், கேமரா, ஸ்டண்ட் காட்சிகள், கலை என அத்தனையிலும் மிரட்டி இருக்கிறார்கள்.


அடுத்த தலைமுறை(க்கான) படம். Congratulations #Ajith #HVinoth & team எனத் தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் ரங்கராஜ் பாண்டே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
வலிமை பார்த்தேன். அதிர்ந்தேன்.
சர்வதேச தரம்! தமிழகம் இன்னும் விவாதிக்காத விஷயம்! பெருந்திரையில் பார்த்தே ஆக வேண்டிய படம்.
கதை, இயக்கம், கேமரா, ஸ்டண்ட் காட்சிகள், கலை என அத்தனையிலும் மிரட்டி இருக்கிறார்கள்.
அடுத்த தலைமுறை(க்கான) படம். Congratulations #Ajith #HVinoth & team. pic.twitter.com/KPXYtUFbVy— R Rangaraj Pandey (@RangarajPandeyR) March 12, 2022
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News
Leave a Reply