[prisna-google-website-translator]

தனுஷ் நடித்த 3 படம் தெலுங்கில் டப்பிங் சூப்பர் வசூல்..


images 68 - Dhinasari Tamilimages 68 - Dhinasari Tamil

பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்த 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளநிலையில் நல்ல வசூலை வாரிக் குவித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் 2011-ல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலை வெறி’ பாடல் உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத் இந்த படத்தில்தான் அறிமுகமானார். 3 படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இந்த நிலையில் 11 வருடங்களுக்கு பிறகு தற்போது 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளனர். அங்கு 3 படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதனால் தனுஷ் மகிழ்ச்சியில் இருக்கிறார். தனுஷ் இப்போது நடித்து வரும் வாத்தி படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. 3 படத்தின் வெற்றியால் ஆந்திராவில் வாத்தி படத்துக்கு பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்று படக்குழுவினர் குஷியில் உள்ளனர்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply