[prisna-google-website-translator]

சரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….

jai

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவ ஜெய். அதேபோல் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். சரக்கு அடித்து போலீசாருடன் சிக்குவது, போதையில் கார் விபத்தை ஏற்படுத்துவது, நடிகை அஞ்சலியுடன் லிவ்விங் டூ கெதரில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுவது, அஜித் போல் சீன் போட்டு தான் நடிக்கும் படங்கள் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது என பெயர் போனவர் ஜெய்.

ஜெய் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த அவர் சரக்கடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். அதன்பின் இசையில் கவனம் செலுத்தி தற்போது இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவாவின் நெருங்கிய உறவினர் ஜெய். எனவே, இசையமைப்பது ஒன்றும் அவருக்கு கடினமான விஷயம் அல்ல. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் புதிய படத்தில் அவர்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply