ஒரே ஒரு புகைப்படம்…தெறிக்கவிட்ட சிம்பு.. மாநாடு மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன் படத்தை முடித்துக்கொடுத்தார். தற்போது புதுச்சேரியில் தங்கியிக்கும் அவர் தீபாவளிக்கு கூட வீட்டிற்கு வராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மாநாடு தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பிற்கு தயாராகும் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வழக்கம் போல் அப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இப்படத்தையே தனது புரைபைல் பிக்சராகவும் அவர் வைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ஏற்கனவே அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் ‘மஃப்டி’படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் கன்னட படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் அவருடன் கௌதம் கார்த்திக்கும் நடித்து வருகிறார். மஃப்டி படத்தின் படப்பிடிப்பு மாலத்தீவில் நடக்கவுள்ளது.