[prisna-google-website-translator]

தங்க கூட இடமில்ல.. நடுத்தெருவுக்கு வந்துட்டேன்… கதறும் பீட்டர்பால்

நடிகை விஜயகுமாரின் மகள் வனிதா ஏற்கனவே 2 கணவர்களை விவாகரத்து செய்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சமீபத்தில் பீட்டர் பாலின் குடிப்பழக்கம் காரணமாக அவரை பிரிந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின், பீட்டர் பாலுடன் வனிதா சமரசம் பேச சென்றதாகவும், பீட்டர் பால் அவரை நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் பரவியது.ஆனால், வனிதா விஜயகுமார் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், பீட்டர் பால் பற்றிய சில செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. தங்க கூட இடமில்லாமால் அவர் பிளாட்பார்மில் தங்கி வருவதாகவும், நடுத்தெருவில் அலைவதாகவும் கூறப்படுகிறது. முன்பு அவரின் அலுவலகத்தில் தங்கியிருந்தார். ஆனால், வனிதா அங்கு சென்றும் அவரின் மானத்தை வாங்கிவிட்டார். எனவே, நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். ஆனால், தற்போது எங்கு சென்றும் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். எனவே, வனிதாவால் நான் நடுத்தெருவுக்கு வந்துட்டேன் என புலம்பி வருகிறாராம்.

Leave a Reply