[prisna-google-website-translator]

தள்ளி வைச்சுட்டாங்களா? கொரோனாவால் எடுத்த முடிவு!

ஓராண்டுக்கும் மேலான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்ட சூர்யவன்ஷி, ஒரு அனுபவம். அதன் ட்ரைய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பின் மூலம், இது உண்மையில் ரசிகர்களுக்கான திரைப்படம் என்பது தெளிவாகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், சூர்யவன்ஷி என்ற இந்தி பட ரிலீசுக்ம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து சூர்யவன்ஷி படத்தை இயக்கியுள்ளார்

ரோஹித் ஷெட்டி. அஜய் தேவ்கன் மற்றும் ரன்வீர் சிங் இருவருக்கும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டர் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 27ல் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரைய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக, விளம்பரப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, படக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓராண்டுக்கும் மேலான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்ட சூர்யவன்ஷி, ஒரு அனுபவம். அதன் ட்ரைய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பின் மூலம், இது உண்மையில் ரசிகர்களுக்கான திரைப்படம் என்பது தெளிவாகிறது.

இப்படத்தை ரசிகர்களுக்கு திரையிட மிகுந்த ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு சூர்யவன்ஷி திரைப்படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தள்ளிவைக்கத் தீர்மானித்துள்ளோம்.

சரியான தருணத்தில் சூர்யவன்ஷி உங்களிடம் திரும்பி வரும். அனைத்தையும் விடப் பாதுகாப்பே முக்கியம். அதுவரை, அதே ஆவலுடன் உடல் நலத்தைக் கவனத்தில் கொண்டு உறுதியாக இருக்க வேண்டுகிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Leave a Reply