[prisna-google-website-translator]

நடனம் ஆடிய பெண் மீது துப்பாக்கிச்சூடு – திருமண விழாவில் அதிர்ச்சி (வீடியோ)

நடனம் ஆடிய பெண் மீது துப்பாக்கிச்சூடு – திருமண விழாவில் அதிர்ச்சி (வீடியோ)

திருமண விழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை ஒருவர் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒரு மேடை அமைத்து நடன அழகிகள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பாடல் நின்று போனது. எனவே, அழகிகள் நடனமாடுவதை நிறுத்தினர். ஆனால், தொடர்ந்து ஆடுங்கள் என ஒரு நபர் கத்திக் கொண்டிருந்தார். அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

திடீரென யாரும் எதிர்பார்த்திராத வகையில் துப்பாக்கியால் ஒரு நடன அழகியை சுட்டார். இதில், தாடையில் அவருக்கு குண்டு பாய்ந்தது. இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் தற்போது உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

The post நடனம் ஆடிய பெண் மீது துப்பாக்கிச்சூடு – திருமண விழாவில் அதிர்ச்சி (வீடியோ) appeared first on Dhinasari Tamil.

Source: டிரைலர்

The post நடனம் ஆடிய பெண் மீது துப்பாக்கிச்சூடு – திருமண விழாவில் அதிர்ச்சி (வீடியோ) appeared first on Vellithirai News.

Leave a Reply