[prisna-google-website-translator]

வேறு நடிகையுடன் தொடர்பு… நடிகையை தாக்கிய கணவர்.. காவல் நிலையத்தில் புகார்

வேறு நடிகையுடன் தொடர்பு… நடிகையை தாக்கிய கணவர்.. காவல் நிலையத்தில் புகார்

பிரபல சின்னத்திரை நடிகையை தாக்கிய புகாரில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்யாணப் பரிசு உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜெயஸ்ரீ. இவர் சீரியல் நடிகர் ஈஸ்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதில், ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்களை அடகு வைத்து ஈஸ்வர் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், அவரால் கடனை திருப்பி செலுத்தி பத்திரத்தை மீட்க முடியவில்லை. இது தொடர்பாக கணவன் மனைவி இருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வேறு நடிகையுடன் தொடர்பு… நடிகையை தாக்கிய கணவர்.. காவல் நிலையத்தில் புகார்

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இது தொடர்பான சண்டையில் ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கடுமையாக தாக்கியுள்ளார். எனவே, ஜெயஸ்ரீ அடையாறு அனைத்திந்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும், சின்னத்திரை நடிகை ஒருவரிடமும் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை தன் கணவர் கொடுமைபடுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, ஈஸ்வர் மற்றும் தாய் சந்திராவை போலீசார் கைது செய்தனர். இதில், சந்திராவை போலீசார் ஜாமினில் விடுவித்தனர். ஈஸ்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: டிவி-தொடர்கள்

The post வேறு நடிகையுடன் தொடர்பு… நடிகையை தாக்கிய கணவர்.. காவல் நிலையத்தில் புகார் appeared first on Vellithirai News.

Leave a Reply