[prisna-google-website-translator]

ஒரே அழுவாச்சி…போதும்யா விட்ருங்க.. பிக்பாஸிடம் கதறும் நடிகை கஸ்தூரி

ஒரே அழுவாச்சி…போதும்யா விட்ருங்க.. பிக்பாஸிடம் கதறும் நடிகை கஸ்தூரி

Actres kasthuri – பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து 3 நாட்களாக ஒரு அழுவாச்சி காட்சிகளாக இருக்கிறது என நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக நடிகை ரேஷ்மா, மோகன் வைத்தியா, சரவணன், மதுமிதா உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்வில் நடந்த சோக சம்பவங்கள் குறித்து அழுது கொண்டே பகிர்ந்து கொண்டனர். இது ஏறக்குறையை ஒரு சீரியல் பார்ப்பது போலவே இருந்தது.

ஒரே அழுவாச்சி…போதும்யா விட்ருங்க.. பிக்பாஸிடம் கதறும் நடிகை கஸ்தூரி

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ள நடிகை கஸ்தூரி ‘போதும்பா விட்ருங்கப்பா… இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க… இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை… இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு…” என பதிவிட்டுள்ளார்.

ஒரே அழுவாச்சி…போதும்யா விட்ருங்க.. பிக்பாஸிடம் கதறும் நடிகை கஸ்தூரி

லோஸ்லியாவைத்தான் அவர் ஸ்ரீலங்கா பொண்ணு என குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘இதே சேனல் ல “கதையல்ல.. னு” சொல்லி ஒரு நிகழ்ச்சி…. வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க… அதுல ஆரமிச்சது… எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் !’ எனவும் பதிவிட்டுள்ளார்.

Source: டிவி-தொடர்கள்

The post ஒரே அழுவாச்சி…போதும்யா விட்ருங்க.. பிக்பாஸிடம் கதறும் நடிகை கஸ்தூரி appeared first on Vellithirai News.

Leave a Reply