![சீதையும் நானே.. திரௌபதியும் நானே.. தீபிகா படுகோனே! 1 deepika](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af80e0aea4e0af88e0aeafe0af81e0aeaee0af8d-e0aea8e0aebee0aea9e0af87-e0aea4e0aebfe0aeb0e0af8ce0aeaae0aea4e0aebfe0aeafe0af81-16-16.jpg?resize=640%2C360&ssl=1)
இதுவரை எந்த ஒரு நடிகையும் நடிக்காத, வாய்ப்பு கிடைக்காத கதாபாத்திரங்களில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார்.
2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால் படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது.
![சீதையும் நானே.. திரௌபதியும் நானே.. தீபிகா படுகோனே! 2 deepika - 1](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af80e0aea4e0af88e0aeafe0af81e0aeaee0af8d-e0aea8e0aebee0aea9e0af87-e0aea4e0aebfe0aeb0e0af8ce0aeaae0aea4e0aebfe0aeafe0af81-16-1.jpg?resize=640%2C394&ssl=1)
இதற்கிடையே இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில், “மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது.
இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரவுபதியாக நடிக்க முன்வந்துள்ளார்” என கூறியுள்ளார்.
![சீதையும் நானே.. திரௌபதியும் நானே.. தீபிகா படுகோனே! 3 deepika 1 - 2](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af80e0aea4e0af88e0aeafe0af81e0aeaee0af8d-e0aea8e0aebee0aea9e0af87-e0aea4e0aebfe0aeb0e0af8ce0aeaae0aea4e0aebfe0aeafe0af81-16-2.jpg?resize=595%2C675&ssl=1)
மேலும் ராமாயணம் படத்திலும் சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர் என ராமாயணம் படக்குழு அறிவித்துள்ளது.
சீதையாகவும், திரவுபதியாகவும் நடிக்கும் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த நடிகையும் 2 கதாபாத்திரங்களிலும் இதுவரை நடிக்கவில்லை, இதுவே முதல்முறை.