செல்போனை பறிகொடுத்த கவுதம் கார்த்திக் – பட்டப்பகலில் கொள்ளையர்கள் அட்டகாசம்

gautham

நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது முத்தையா இயக்கும் ஒரு படத்திலும், இயக்குனர் எழில் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை வழியாக அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரின் செல்போனை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர். எனவே, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, போலீசார் கவுதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்றவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டப்பகலில் கவுதமிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.