பா. ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதை – சம்மதம் சொல்வாரா விஜய்?…

vijay

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

காலா படம் வேலை நடந்து கொண்டிருந்த போது விஜயை சந்தித்து ஒரு கமர்ஷியல் சூப்பர் ஹீரோ காதையை கூறியுள்ளார் ரஞ்சித். அந்த கதையும் விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஆனால், அதன்பின் விஜயிடமிருந்து ரஞ்சித்திற்கு அழைப்பு வரவில்லையாம்.

அதன்பின் விஜய் பிகில் படத்திற்கு நடிக்க போய்விட்டார். அதன்பின் மாஸ்டரையும் முடித்து விட்டார். அடுத்து டாக்டர் பட இயக்குனர் நெல்சன் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

விஜய் யாரை தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கே வெளிச்சம்!