[prisna-google-website-translator]

கட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே

கட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே

NGK Upset Suriya fans – செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று வெளியான என்.ஜி.கே திரைப்படம் பெரும்பாலான சூர்யா ரசிகர்களையே கவரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

என்.ஜி.கே திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகியது. பல ஊர்களில் அதிகாலை 5 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது. சூர்யா ரசிகர்கள் பலரும் அதிகாலை காட்சியை பார்த்துவிட்டும், முதல் பாதி பார்த்த பின்பும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

கட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே

குறிப்பாக படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாக பலரும் கூறியிருந்தனர். மேலும், படம் மாஸாக வந்துள்ளது. செல்வராகவன், சூர்யா காம்பினேஷனை பிடிக்காமல் இருக்குமா? வெறித்தனம்.. வேற லெவல்.. அனல் தெறிக்குது. என பதிவிட்டு வந்தனர்.

கட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே

தற்போதும் அதிகாலை காட்சியை பலரும் பார்த்துவிட்ட நிலையில், என்.ஜி.கே கலைவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தியேட்டரை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஒன்னுமில்லை… முழுக்க முழுக்க செல்வராகவன் படம்… சண்டைக் காட்சி நன்றாக இருக்கிறது. யுவனின் பின்னணி இசை அபாரம். சர்கார். எல்.கே.ஜி இரண்டும் கலந்த கலவை… படம் சீக்கிரம் முடிஞ்சம் மாதிரி இருக்கு.. 10 வருஷம் கழிச்சிதான் ஹிட் ஆகும்.. ரொம்ப எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் படத்தில் இல்லை. பத்துக்கு பனிரெண்டு கட் அவுட் வச்சதே வேஸ்ட் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், சில இடங்களில் அரசியல் வசனம் நன்றாக இருப்பதாகவும், சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும், என்.ஜி.கே திரைப்படம் உண்மையிலேயே ரசிகர்களை கவர்கிறதா இல்லையா என்பது இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் தெரிந்துவிடும்.

Source: விமர்சனம்

The post கட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே appeared first on Vellithirai News.

Leave a Reply