Tag: Cinema news

  • இதுக்கு எண்டே இல்லையா?… இந்த படமும் ஓடிடியிலா?.. அதிர்ச்சியான ரசிகர்கள்…

    எப்போது கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதோ அப்போதிலிருந்து ஓடிடி எனப்படும் இணையதளம் மற்றும் ஆப்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது துவங்கிவிட்டது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக லாபத்தை கொடுத்துள்ளது. எனவே, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், முன்னணி நடிகர்கள் தங்கள் படத்தை ஓடிடியில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு 2 காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம், கொரோனா பரவல் காரணமாக தற்போது தியேட்டர்களில் படம்…

  • கை விட்ட ஹீரோக்கள்… ஹரி எடுத்த அதிரடி முடிவு.. அவருக்கு அது சரியான இடம்தான்…

    தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, கடந்த 3 வருடங்களாக ஹரி இயக்கத்தில் எந்த படமும் உருவாகவில்லை. சூர்யாவை வைத்து ‘அருவா’ என்கிற படம் உருவானது. ஆனால், அப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் நடிக்க மறுக்க…

  • நடிகரும் கதையாசியருமான ஈரோடு சௌந்தர் மரணம்…

    தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் ஈரோடு சவுந்தர். குறிப்பாக சேரன் பாண்டியன், நாட்டாமை உள்ளிட்ட சில முக்கிய வெற்றி படங்களுக்கு கூட இவர்தான் வசனகர்த்தா. மேலும், நாட்டாமை உள்ளிட்ட கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் நடித்து வந்தார். சரத்குமார் நடித்த சிம்மராசி படத்தை இயக்கியும் உள்ளார். இந்நிலையில், நேற்று அவர் மரணமடைந்துள்ளார். அவரின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • டி.ராஜேந்தர் தலைவர்.. கே.ராஜன் பொருளாளர்… புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பட்டியல் இதோ!.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கு சென்றுவிட்ட நிலையில், இயக்குனர் பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முரளி வெற்றி பெற்றார். இந்நிலையில், தோல்வி அடைந்த டி.ராஜேந்தர் தனியாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சங்கத்தின் நிர்வாகிகளின்…

  • பா. ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதை – சம்மதம் சொல்வாரா விஜய்?…

    தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். காலா படம் வேலை நடந்து கொண்டிருந்த போது விஜயை சந்தித்து ஒரு கமர்ஷியல் சூப்பர் ஹீரோ காதையை கூறியுள்ளார் ரஞ்சித். அந்த கதையும் விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஆனால், அதன்பின் விஜயிடமிருந்து ரஞ்சித்திற்கு அழைப்பு வரவில்லையாம். அதன்பின் விஜய் பிகில் படத்திற்கு நடிக்க போய்விட்டார். அதன்பின் மாஸ்டரையும் முடித்து விட்டார். அடுத்து…

  • பார்த்திபனே இப்படி செய்யலாமா? – புலம்பும் மாஸ்டர் பட தயாரிப்பாளர்

    மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் விஜய் சேதுபதியை வைத்து ‘துக்ளக் தர்பார்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் பார்த்திபன், ராஷிகா கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கால் சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக பார்த்திபனுக்கு ஒரு பெருந்தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அதை விட அதிக சம்பளத்தை பார்த்திபன் கேட்கிறாராம். அதற்கு காரணமும் இருக்கிறது. பார்த்திபான் ஏற்கனவே…

  • விஜயின் ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போது? – பரபர அப்டேட்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது. அதேபோல், மாஸ்டர் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகிவிட்ட நிலையில் இப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாடம் பொங்கலுக்கு ரிலீஸ் எனில், அதற்கு முன்பே டிரெய்லர் வெளியாக வேண்டும்…

  • கடுப்பாக்கிய ஜெயம் ரவி.. முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு…

    கோமாளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் மார்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அப்படத்திற்கு பின் மளமளவென படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார். லஷ்மண் இயக்கத்தில் நடித்த ‘பூமி’ படம் முடிந்துவிட்டது. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன்பின் அஹமது மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் ஒப்பந்தமானார். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ஒரு புதிய படமும், ஸ்க்ரீன் சீன் நிறுவனத்திற்கு 3 படங்களும் நடிக்க கமிட் ஆனார். ஆனால், முருகதாஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு தற்போது வரை அவர்…

  • ஷங்கர் இயக்கும் புதிய படம் – ஹீரோ அந்த வாரிசு நடிகராம்!..

    தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என பிரமாண்ட படங்களை இயக்கியர் ஷங்கர். எந்த நேரத்தில் இந்தியன் 2 வை ஆரம்பித்தாரோ 2 வருடங்களாக பல பிரச்சனைகளால் அப்படம் முடங்கிக் கிடக்கிறது. ஒருபக்கம் அப்படத்தை உருவாக்கும் முயற்சியிலும் லைக்கா நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. எனவே, வெறுத்துப் போன அவர் வேறு படத்தை இயக்குவது என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம். மும்பையிலிருந்து ஒரு பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஷங்கரை வைத்து படம் எடுக்க…

  • லெஸ்பியனாக நடிக்கும் அஞ்சலி… புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்…

    தமிழ் எம்.ஏ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பின்பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பாவ கதைகள் என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தை 4 முன்னணி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இப்படத்தில் அவர் ஓரின சேர்க்கையாளராக துணிச்சலாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் தொடர்பான புகைப்படங்கலும் வெளியே கசிந்து வருகிறது. இதில், உள்ளாடை மட்டும் அணிந்து அஞ்சலி போஸ் கொடுத்த…