Author: Vellithirai News

  • ரூ.1000 கோடி பட்ஜெட்… எந்த ஹீரோவும் செய்யாத சாதனை… பட்டைய கிளப்பும் பிரபாஸ்…

    தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பிரபாஸ் தற்போது சாஹோ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். இது பிரபாஸின் 20வது திரைப்படமாகும். அடுத்து, 21வது படமாக தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்து அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த ‘மகாநடி’பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒருபுதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா…

  • காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று…

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,88,920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 1400 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் , கடந்த சில…

  • நடிகரும் கதையாசியருமான ஈரோடு சௌந்தர் மரணம்…

    தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் ஈரோடு சவுந்தர். குறிப்பாக சேரன் பாண்டியன், நாட்டாமை உள்ளிட்ட சில முக்கிய வெற்றி படங்களுக்கு கூட இவர்தான் வசனகர்த்தா. மேலும், நாட்டாமை உள்ளிட்ட கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் நடித்து வந்தார். சரத்குமார் நடித்த சிம்மராசி படத்தை இயக்கியும் உள்ளார். இந்நிலையில், நேற்று அவர் மரணமடைந்துள்ளார். அவரின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • வாவ்.. சின்ன வயசுலயே இவ்ளோ அழகா இருந்தாரா விக்ரம்? – வைரல் புகைப்படம்…

    தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, டப்பிங் பேசி, சேது திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விக்ரம். அதன்பின் சாமி, தூள், தில் என ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய அவர் தற்போதும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெத்து நடித்தும் வருகிறார். இந்நிலையில், விக்ரம் அரும்பு மீசை முளைக்கும் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • டி.ராஜேந்தர் தலைவர்.. கே.ராஜன் பொருளாளர்… புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பட்டியல் இதோ!.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கு சென்றுவிட்ட நிலையில், இயக்குனர் பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முரளி வெற்றி பெற்றார். இந்நிலையில், தோல்வி அடைந்த டி.ராஜேந்தர் தனியாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சங்கத்தின் நிர்வாகிகளின்…

  • பா. ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதை – சம்மதம் சொல்வாரா விஜய்?…

    தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். காலா படம் வேலை நடந்து கொண்டிருந்த போது விஜயை சந்தித்து ஒரு கமர்ஷியல் சூப்பர் ஹீரோ காதையை கூறியுள்ளார் ரஞ்சித். அந்த கதையும் விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஆனால், அதன்பின் விஜயிடமிருந்து ரஞ்சித்திற்கு அழைப்பு வரவில்லையாம். அதன்பின் விஜய் பிகில் படத்திற்கு நடிக்க போய்விட்டார். அதன்பின் மாஸ்டரையும் முடித்து விட்டார். அடுத்து…

  • பார்த்திபனே இப்படி செய்யலாமா? – புலம்பும் மாஸ்டர் பட தயாரிப்பாளர்

    மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் விஜய் சேதுபதியை வைத்து ‘துக்ளக் தர்பார்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் பார்த்திபன், ராஷிகா கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கால் சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக பார்த்திபனுக்கு ஒரு பெருந்தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அதை விட அதிக சம்பளத்தை பார்த்திபன் கேட்கிறாராம். அதற்கு காரணமும் இருக்கிறது. பார்த்திபான் ஏற்கனவே…

  • பிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா?

    விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே காரணமாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி முடிந்த பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவும் இல்லை, ஒருவரை பற்றி ஒருவர் பேசவும் இல்லை. எனவே, அவர்களின் காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், கவினுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது காதல் திருமணம் எனவும் இருவரின் வீட்டாரும் சம்மதம்…

  • விஜயின் ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போது? – பரபர அப்டேட்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது. அதேபோல், மாஸ்டர் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகிவிட்ட நிலையில் இப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாடம் பொங்கலுக்கு ரிலீஸ் எனில், அதற்கு முன்பே டிரெய்லர் வெளியாக வேண்டும்…

  • கடுப்பாக்கிய ஜெயம் ரவி.. முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு…

    கோமாளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் மார்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அப்படத்திற்கு பின் மளமளவென படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார். லஷ்மண் இயக்கத்தில் நடித்த ‘பூமி’ படம் முடிந்துவிட்டது. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன்பின் அஹமது மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் ஒப்பந்தமானார். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ஒரு புதிய படமும், ஸ்க்ரீன் சீன் நிறுவனத்திற்கு 3 படங்களும் நடிக்க கமிட் ஆனார். ஆனால், முருகதாஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு தற்போது வரை அவர்…